Sunday, January 23, 2011

நான் படித்த நல்ல கவிதை!

தோளில் சாய்ந்து கொண்டு
தோழமை வெளிப்படுத்துவாய்.
நெஞ்சில் சாய்ந்து கொண்டு
நேசம் வெளிப்படுத்துவாய்.
இடம் பொருள் அறிந்து
...நடத்தல் இதுதானோ?

ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...
ஆனாலும் அப்படி கொடுத்தால்தான்
இனிப்பேன் என்று அடம்பிடிக்கிறது
முத்தங்களும்....

நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள்

உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.

எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள்

இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...


Source: http://www.facebook.com/pages/en-tamil/158502987507709

No comments:

Post a Comment